Monday 10 February 2020
Wednesday 5 February 2020
Thursday 18 July 2019
ஊடக சாளரம் 3: மெர்சி மற்றும் வருண்
ஜுலை 18 அன்று கலைஞர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மெர்சி மற்றும் இசையமைப்பாளர் வருண் ஆகியோர் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களைச் சந்தித்து தங்களுடைய ஊடக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
சத்தியம் மற்றும் கலைஞர் செய்தி அலைவரிசைகளில் ஏழு வருட அனுபவம் பெற்ற மெர்சி சித்ரா, செய்தி சேகரிக்கும் முறை, தணிக்கை செய்வது, தொகுத்து வழங்குவது, நிறுவன அமைப்பு பற்றி விரிவாக விளக்கினார். ஒரு செய்தி வாசிப்பாளர் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள், கையாள வேண்டிய முறைகள், நடைமுறை சிக்கல்கள் ஆகியவற்றை விளக்கினார். செய்தி வாசிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களை படிக்க வைத்து செய்முறை பயிற்சியளித்தது பயனுள்ள நேரமாக அமைந்தது.
இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து பணியாற்றி அனுபவம் பெற்ற வருண், திரைப்படத் துறையில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை அம்சங்களை விளக்கினார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் கதை சொல்வதற்கான முன் தயாரிப்பு, தயாரிப்பு, மற்றும் பின் தயாரிப்பு உத்திகள் விளக்கப்பட்டது. திரைப்பட வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள், துறை சார்ந்து நிகழ்காலத்தில் சந்திக்கக்கூடிய சவால்கள், பிரச்சினைகள் முதலியவற்றை மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.
திரைப்படங்களில் 3D, Dolby Atmos, Cube, DTS போன்ற ஒலி சார்ந்த முறைகள், அவை கலவை செய்யப்படும் ஸ்டுடியோக்கள் பற்றி விளக்கப்பட்டது. இசையமைப்பாளர், Studio Sound Engineer, Recording Engineer, Mixing & Mastering போன்ற ஒலி சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கப்பட்டது.
Friday 24 August 2018
பட்டம் பெற்ற மாணவர்கள்
எமது துறையில் 2015-17 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு 18-08-2018 (சனிக்கிழமை) அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
15PMA வகுப்பில் பயின்ற 15 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதால் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 100%. அனைவருமே பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு தங்கள் கடந்த கால கல்லூரி அனுபவங்களையும், தற்போது பணியாற்றிவரும் துறை பற்றியும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
லொயோ கல்லூரியின் பெர்ட்ரம் பெருமண்டபத்தில் துறைத்தலைவர் முனைவர் லூ.சின்னப்பன் மாணவர்களின் பெயர்களை வாசிக்க கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை F. ஆண்ட்ரு சே.ச. அவர்கள் பட்டங்களை வழங்கினார்.
இந்த வகுப்பில் பயின்ற அருட்தந்தை சகாய ஜெரால்டு எபின் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான பதக்கம் பெற்றார்.
இம்மாணவர்களின் பணியும் வாழ்க்கையும் சிறக்க துறை வாழ்த்துகிறது.
15PMA வகுப்பில் பயின்ற 15 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதால் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 100%. அனைவருமே பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு தங்கள் கடந்த கால கல்லூரி அனுபவங்களையும், தற்போது பணியாற்றிவரும் துறை பற்றியும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
லொயோ கல்லூரியின் பெர்ட்ரம் பெருமண்டபத்தில் துறைத்தலைவர் முனைவர் லூ.சின்னப்பன் மாணவர்களின் பெயர்களை வாசிக்க கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை F. ஆண்ட்ரு சே.ச. அவர்கள் பட்டங்களை வழங்கினார்.
இந்த வகுப்பில் பயின்ற அருட்தந்தை சகாய ஜெரால்டு எபின் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான பதக்கம் பெற்றார்.
இம்மாணவர்களின் பணியும் வாழ்க்கையும் சிறக்க துறை வாழ்த்துகிறது.
Thursday 31 May 2018
மாணவரின் அடுத்த கட்டம்!
ஊடகக் கலைகள் துறை மாணவர், செ.மாணிக்கவாசகம், நக்கீரன் இதழின் இளம் பத்திரிகையாளர் என்கிற பயிற்சியினைப் பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை வாழ்த்துகிறோம்! தமிழகம் முழுவதிலும் இருந்து 23 பேர் இப்பயிற்சிக்காக தேர்வாகியுள்ளனர். நக்கீரன் பத்திரிகையின் 2018 மே-ஜுன் இதழில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே எமது துறையில் பயின்ற மாணவர்கள் சிலர் விகடன் மாணவ பத்திரிகையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Friday 9 February 2018
முன்னாள் மாணவருடன் உரையாடல்
எமது முன்னாள் மாணவர் விஷ்ணு கீதம் (2012-2014 [12PMA]) அவர்களுடன் தற்போதைய முதலாம் ஆண்டு மாணவர்கள் (17PMA) உரையாடினர்.
பெங்களூரு தேசிய நாடகப் பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்று வரும் விஷ்ணு கீதம், தனது கற்றலை தன்னுடன் நிறுத்திக்கொள்ளாமல் எதிர்கால ஊடகக் கலைஞர்களுக்கு பகிர்ந்தளித்தார். நடிப்பிற்கு பயன்படும் உடல், குரல், மனம், ஆழ்மனம் உள்ளிட்ட அடிப்படைகளை சரியான முறையில் பயன்படுத்த கற்றுக்கொடுக்கப்பட்டது.
'படச்சுருள்' பத்திரிகையில் வெளியான கட்டுரைகள் சார்ந்து ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் "Method of Physical Action," உள்ளிட்ட கருத்துகள் விளக்கப்பட்டன.
கேரளாவின் கூடியாட்டம், களறிப்பயட்டு, மஹாராஷ்டிராவின் மல்லகம்பா, கன்னடத்தின் யக்ஷகானா, தமிழகத்தின் தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களுக்கு அறிமுகம் தரப்பட்டது.
நடிப்புக் கலையில் பயிற்சி தரும் கல்வி நிறுவனங்கள் பற்றிய விவரங்களையும் மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.
வாழ்க்கை அனுபவங்களுடன் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதால் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டும் உரையாடலாக இந்நிகழ்வு அமைந்தது.
பெங்களூரு தேசிய நாடகப் பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்று வரும் விஷ்ணு கீதம், தனது கற்றலை தன்னுடன் நிறுத்திக்கொள்ளாமல் எதிர்கால ஊடகக் கலைஞர்களுக்கு பகிர்ந்தளித்தார். நடிப்பிற்கு பயன்படும் உடல், குரல், மனம், ஆழ்மனம் உள்ளிட்ட அடிப்படைகளை சரியான முறையில் பயன்படுத்த கற்றுக்கொடுக்கப்பட்டது.
'படச்சுருள்' பத்திரிகையில் வெளியான கட்டுரைகள் சார்ந்து ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் "Method of Physical Action," உள்ளிட்ட கருத்துகள் விளக்கப்பட்டன.
கேரளாவின் கூடியாட்டம், களறிப்பயட்டு, மஹாராஷ்டிராவின் மல்லகம்பா, கன்னடத்தின் யக்ஷகானா, தமிழகத்தின் தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களுக்கு அறிமுகம் தரப்பட்டது.
நடிப்புக் கலையில் பயிற்சி தரும் கல்வி நிறுவனங்கள் பற்றிய விவரங்களையும் மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.
வாழ்க்கை அனுபவங்களுடன் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதால் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டும் உரையாடலாக இந்நிகழ்வு அமைந்தது.
Monday 25 September 2017
சினிமா வியாபாரம் - விரிவுரை
திரைப்படத் துறை வல்லுநர், சினிமா விமர்சகர் திரு.கேபிள் சங்கர் 25-செப்-2017 அன்று ஊடகக் கலைகள் துறை மாணவர்களுக்கு சினிமா வியாபாரம் குறித்து விரிவுரையாற்றினார்.
திரு. கேபிள் சங்கருக்கு பேரா. லாரன்ஸ் ஜெயக்குமார் நினைவு பரிசினை வழங்கினார். அருகில் பேரா.J.K.ஆனந்த் |
Outright, Minimum Guarantee (MG), Hire, Distribution, Overflow, Date எடுத்தல், centre fix செய்தல், Collection, Share, Commission, hold-over, in-film advertising, audio rights, theatrical rights, dubbing rights, remake rights, satellite rights, dubbing satellite rights, indian digital rights, foreign digital rights, FMS (foreign, Malaysia, Singapore), உள்ளிட்ட உத்திகளைப் பற்றி மாணவர்களுக்கு உதாரணங்களுடன் விளக்கினார்.
Subscribe to:
Posts (Atom)