Wednesday 9 September 2015

வாரம் ஒரு ஊடக வல்லுநர் - சமீபத்திய விருந்தினர்கள்

ஊடகக் கலைகள் துறை 'வாரம் ஒரு ஊடக வல்லுநர்' என்ற தலைப்பில் ஊடகத் துறை சார்ந்த கலைஞர்களின் அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறது.

ஆகஸ்ட் 28: அன்று திரைத்துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் எமது முன்னாள் மாணவர் ஜெயச்சந்திர ஹாஷ்மி கலந்துகொண்டார்.  குறும்பட ஆக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த பகிர்வரங்கத்தில் சிறப்புரையாற்றிய ஹாஷ்மி, திரைப்படத்தில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் இன்றைய காலகட்டத்தில் அதிகம் இருக்கிறது என்றும் அதற்கான உத்திகள் சிலவற்றையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இடமிருந்து வலம்: ஜெயச்சந்திர ஹாஷ்மி, தமிழ் ஸ்டுடியோ அருண், கவின் கவி. வாழ்த்துரை வழங்கும் துறைத்தலைவர்.


ஆகஸ்ட் 31: அன்று இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் தமிழ் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் ஊடகக் கலைகள் துறை மாணவர்களைச் சந்தித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.



செப்டம்பர் 9, 2015 அன்று முன்னாள் மாணவரும் தற்போது தளிர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் ஜெகநாதன் மாணவர்களைச் சந்தித்து உரையாற்றினார். தற்போது விஜய் அலைவரிசைக்காக தயாரித்துவரும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி வரை மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.