Friday 24 August 2018

பட்டம் பெற்ற மாணவர்கள்

எமது துறையில் 2015-17 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு 18-08-2018 (சனிக்கிழமை) அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

15PMA வகுப்பில் பயின்ற 15 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதால் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 100%. அனைவருமே பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு தங்கள் கடந்த கால கல்லூரி அனுபவங்களையும், தற்போது பணியாற்றிவரும் துறை பற்றியும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் பகிர்ந்துகொண்டனர்.



லொயோ கல்லூரியின் பெர்ட்ரம் பெருமண்டபத்தில் துறைத்தலைவர் முனைவர் லூ.சின்னப்பன் மாணவர்களின் பெயர்களை வாசிக்க கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை F. ஆண்ட்ரு சே.ச. அவர்கள் பட்டங்களை வழங்கினார்.

இந்த வகுப்பில் பயின்ற அருட்தந்தை சகாய ஜெரால்டு எபின் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான பதக்கம் பெற்றார்.

இம்மாணவர்களின் பணியும் வாழ்க்கையும் சிறக்க துறை வாழ்த்துகிறது.

Thursday 31 May 2018

மாணவரின் அடுத்த கட்டம்!

ஊடகக் கலைகள் துறை மாணவர், செ.மாணிக்கவாசகம், நக்கீரன் இதழின் இளம் பத்திரிகையாளர் என்கிற பயிற்சியினைப் பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை வாழ்த்துகிறோம்! தமிழகம் முழுவதிலும் இருந்து 23 பேர் இப்பயிற்சிக்காக தேர்வாகியுள்ளனர். நக்கீரன் பத்திரிகையின் 2018 மே-ஜுன் இதழில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஏற்கனவே எமது துறையில் பயின்ற மாணவர்கள் சிலர் விகடன் மாணவ பத்திரிகையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Friday 9 February 2018

முன்னாள் மாணவருடன் உரையாடல்

எமது முன்னாள் மாணவர் விஷ்ணு கீதம் (2012-2014 [12PMA]) அவர்களுடன் தற்போதைய முதலாம் ஆண்டு மாணவர்கள் (17PMA) உரையாடினர்.

பெங்களூரு தேசிய நாடகப் பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்று வரும் விஷ்ணு கீதம், தனது கற்றலை தன்னுடன் நிறுத்திக்கொள்ளாமல் எதிர்கால ஊடகக் கலைஞர்களுக்கு பகிர்ந்தளித்தார். நடிப்பிற்கு பயன்படும் உடல், குரல், மனம், ஆழ்மனம் உள்ளிட்ட அடிப்படைகளை சரியான முறையில் பயன்படுத்த கற்றுக்கொடுக்கப்பட்டது.

'படச்சுருள்' பத்திரிகையில் வெளியான கட்டுரைகள்  சார்ந்து ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் "Method of Physical Action," உள்ளிட்ட கருத்துகள் விளக்கப்பட்டன.

கேரளாவின் கூடியாட்டம், களறிப்பயட்டு, மஹாராஷ்டிராவின் மல்லகம்பா, கன்னடத்தின் யக்ஷகானா, தமிழகத்தின் தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களுக்கு அறிமுகம் தரப்பட்டது.

நடிப்புக் கலையில் பயிற்சி தரும் கல்வி நிறுவனங்கள் பற்றிய விவரங்களையும் மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.

வாழ்க்கை அனுபவங்களுடன் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதால் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டும் உரையாடலாக இந்நிகழ்வு அமைந்தது.